புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (47) என்பவர் நேற்று (ஏப்ரல் 7) காலை நமணசமுத்திரம் – புதுக்கோட்டை இடையே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அவ்வழியே வந்த பயணிகள் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரைக்குடி ரயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி, விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
