தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கமாநில தலைவர் அய்யாக்கண்ணு கடந்த சில தினங்களுக்கு முன் திருச்சி கே எம் சி மருத்துவமனையில் இருதய அறுவைசிகிச்சை (ByePass Surgery) செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து அவர் அண்ணாமலை நகர் மலர் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வில் உள்ளார்.
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு இன்று காலை அய்யாக்கண்ணு இல்லத்துக்கு நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார். இரு மாத காலத்திற்கு நன்றாக ஓய்வெடுக்கவும் போராட்டங்களை தவிர்க்குமாறும் அமைச்சர் அறிவுரை வழங்கினார். அப்போது திருச்சி மாநகர மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.