Skip to content
Home » மயக்க ஊசி செலுத்தியதில் கணவர் உயிரிழப்பு…. மனைவி கண்ணீர் மல்க புகார்.

மயக்க ஊசி செலுத்தியதில் கணவர் உயிரிழப்பு…. மனைவி கண்ணீர் மல்க புகார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ் வயது 55. இவர் முன்னாள் ஊராட்சி மன்றத் துணை தலைவராக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வேளாங்கண்ணி அருகே நடந்து சென்ற போது எதிரே வந்த இருச்சக்கர வாகனம் மோதியதில் இடது கால் உடைந்துள்ளது.அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வந்துள்ளார் இந்த நிலையில் அவருக்கு காலில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளர்.

அதனைத் தொடர்ந்து அதே மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நிலையில் இன்று காலை மீண்டும் காலில் அறுவை சிகிச்சை செய்து இரும்பு பிளேட் வைக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி உள்ளனர். அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு கொண்டு சென்று மயக்க ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஜேசுதாஸ் மனைவியிடம் உங்கள் கணவருக்கு திடிர் என மாரடைப்பு ஏற்பட்டு ஜேசுதாஸ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால்

அதிர்ச்சியடைந்த அவர் மனைவி மருத்துவமனையில் கதறி அழுதார். காலை வரை நன்றாக இருந்தவரை மயக்க ஊசி போட்டு கொன்று விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மருத்துவமனை டீன் ஜெனிதா கிறிஸ்டினாவிடன் விளக்கம் கேட்ட போது எலும்பு இருக்க கூடிய மஜ்ஜை இரத்தத்தில் கலந்து இதய அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். நாகையில் காலில் அறுவை சிகிச்சை சென்றவருக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!