பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பிய 274 குற்றவாளிகளை, 2019 முதல் ‘திரிசூல் நடவடிக்கை’ மூலம் இந்தியா மீட்டுள்ளது. செயற்கைக்கோள் படங்கள் மற்றும் டிஜிட்டல் தடயங்களை பயன்படுத்தி, சிபிஐ, ஐபி, ராவ் மற்றும் இன்டர்போல் அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைந்த சர்வதேச கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளின் பலனாக, 2025-ல் 70 குற்றவாளிகளும், 2026 ஜூலை மாதத்திற்குள் 45 குற்றவாளிகளும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திரிசூல்’ ஆபரேஷன்- 274 குற்றவாளிகளை இந்தியா கொண்டு வந்த சிபிஐ
