Skip to content
Home » ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி வாதிட்டார்.  அவர், கட்சியின் அடிப்படை விதிகளின்படி பொதுக்குழுவின் முடிவுகளே இறுதியானது. கட்சியின் அனைத்து முடிவுகளையும் அடிப்படை தொண்டர்களிடம் கேட்டு எடுக்க முடியாது; உட்சபட்ச அதிகாரம் பெற்றது பொதுக்குழுதான்.  உச்சபட்ச அதிகாரம் என்பது பொதுகுழுதான் என்று குறிப்பிட்டார்.  ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளை எடுக்வும், கட்சி  விதிகளை திருத்துவதற்கும் தளர்த்துவற்கும் பொதுக்குழுவுக்கே அதிகாரம் இருப்பதாகவும் அவர் வாதிட்டார். தனி நீதிபதி  சரியான தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கட்சியினுடைய உறுப்பினர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் கட்சி விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் என்றும், கட்சி விதிகளுக்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்றும்,  கட்சி விதிகளை மீறினால் ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் மீது கூட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்கிற வாதத்தையும் அவர் முன் வைத்தார். மாநிலம் முழுவதும் தனியாக நிர்வாகிகளை நியமித்து வரும்போது பன்னீர்செல்வம் எப்படி கட்சியில் இருந்து நீக்கியதற்காக நிவாரணம் கோர முடியும் என்ற கேள்வியையும் எழுப்பினார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதத்தை தொடங்கினார். கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கட்சி விதியை எம்.ஜி.ஆர் வகுத்தார். அந்த விதி நான்கு ஆண்டுகள் தவிர்த்து இதுவரை அமலில் உள்ளது என கூறினார். இதையடுத்து வழக்கை வருகிற ஜூன் 12-ந் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!