தமிழ்நாட்டில் சட்டவிரோதக் கட்டப் பஞ்சாயத்துகளுக்கு எதிராகவும், சமூக சமத்துவத்திற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், கிராமப்புறங்களில் இன்னும் தீண்டாமையும் சமூகப் புறக்கணிப்பும் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட ஒரே காரணத்திற்காக, ஒரு குடும்பத்தை ஒட்டுமொத்தக் கிராமமும் சேர்ந்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள கொடூரம் கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.
நாட்டாமை’ பட பாணியில் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட தம்பதிகள், நாகையில் நீதி கேட்டு மண்டியிட்டு வந்து புகார் அளித்துள்ளனர். வெள்ளப்பள்ளம் கிராமத்தை
