Skip to content
Home » பாபநாசம் – அரியலூர் புகை வண்டி நிலையம்  இடையே அரசு பஸ் தொடக்கம்….

பாபநாசம் – அரியலூர் புகை வண்டி நிலையம்  இடையே அரசு பஸ் தொடக்கம்….

  • by Senthil

பாபநாசம் – அரியலூர் புகை வண்டி நிலையம்  இடையே அரசுப் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

tn

இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் , எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா தனது சமூகவலைத்தள பக்கத்தில், பாபநாசம் – அரியலூர் இடையே நேரடி பேருந்து போக்குவரத்து துவக்க வேண்டும் என்கிற பாபநாசம் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை  தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நான் வலியுறுத்தியதை நிறைவேற்றும்  வகையில் நேற்று  (03.03.2024) பாபநாசம் – அரியலூர் புகை வண்டி நிலையம்  இடையே அரசுப் பேருந்து போக்குவரத்து துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு எஸ். கல்யாணசுந்தரம், திரு செ. இராமலிங்கம் மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் நிறுவனத்தின் உயரதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக,மமக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் முன்னிலையில் இந்த பேருந்து சேவையை துவக்கி வைத்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!