Skip to content
Home » பாபநாசத்தில் வாக்குபதிவு எந்திரம் பயன்படுத்துவது குறித்த பயிற்சி முகாம்..

பாபநாசத்தில் வாக்குபதிவு எந்திரம் பயன்படுத்துவது குறித்த பயிற்சி முகாம்..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் மண்டல அலுவலர்களுக்கான வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்துவது குறித்த செய்முறை விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பிற்பட்ட நலத்துறை நில எடுப்பு தனி வட்டாட்சியர் குமார் கலந்து கொண்டு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் மற்றும் பதிவேற்றம் செய்வது குறித்து செய்முறை விளக்கம் மூலம் விளக்கி காண்பித்தார்.

பயிற்சி முகாமில் பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன், வட்ட வழங்க அலுவலர் அருணகிரி, தேர்தல் துணை வட்டாட்சியர் விவேகானந்தன் மற்றும் மண்டல அனைத்து மண்டல அலுவலர்கள் உதவி மண்டல அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!