Skip to content
Home » பாபநாசத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்….

பாபநாசத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரையபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க, அரையபுரம் அங்காடி கிளையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, திமுக பாபநாசம் தெற்கு ஒன்றியச் செயலர் நாசர், பேரூர் செயலர் கபிலன், கவுன்சிலர்கள் ஜாபர் அலி, பிரகாஷ், திமுக மாவட்ட துணைச் செயலர்கள் அய்யா ராசு, துரை முருகன், வார்டுச் செயலர் கார்த்தி, சிறுபான்மை பிரிவு அனிபா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணி கண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். இதேப் போன்று மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, எடக்குடி ரேஷன் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப் பட்டது. இதில் ஊராட்சி மன்றத் தலைவர்

பழனி, திமுக அம்மாபேட்டை வடக்கு ஒன்றியச் செயலர் சுரேஷ், மாவட்டக் கவுன்சிலர் ராதிகா உட்பட பங்கேற்றனர். இதேப் போன்று ராஜகிரியில் பொங்கல் பரிசுத் தொகுப்பை திமுக தெற்கு ஒன்றியச் செயலர் நாசர் வழங்கினார். இதில் ஊராட்சி உறுப்பினர்கள் முபாரக், சிக்கந்தர் உள்பட பங்கேற்றனர். இதேபோன்று சரபோஜிராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரெகுநாதபுரம் ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சியில் செயலர் கலிய மூர்த்தி உள்பட பங்கேற்றனர். இதேப் போன்று அய்யம் பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் திமுக அய்யம் பேட்டை பேரூர் செயலர் துளசி அய்யா, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் பக்கீர் மைதீன் உள்பட பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!