தென்னக ரயில்வே பாதுகாப்பு படையின் கோட்டங்களுக்கு இடையிலான கூடைப்பந்து மற்றும் செஸ் போட்டிகள் திருச்சி கோட்டத்தால் திருச்சி, காஜாமலை ரயில்வே பாதுகாப்பு படை மண்டல பயிற்சி பள்ளியில் (மார்ச் 25,26,27) ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது.
திருச்சி, சென்னை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 4 கோட்டங்களிலிருந்து 4 அணிகள் பங்கேற்ற கூடைப்பந்து போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்றது.
லீக் போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த திருச்சி மற்றும் பாலக்காடு அணிகள் இறுதி போட்டியில் விளையாடின.
இறுதி போட்டியில் பாலக்காடு அணி, திருச்சி அணியை 43-33 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று முதலிடம் பிடித்து
தென்னக ரயில்வே பாதுகாப்பு படையின் கோட்டங்களுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியின் சாம்பியன் அணியாக திகழ்ந்தது.
திருச்சி, சென்னை, பாலக்காடு, திருவனந்தபுரம், மதுரை ஆகிய 5 கோட்டங்களிலிருந்து 11 வீரர்கள் மற்றும் 1 வீராங்கனை பங்கேற்ற செஸ் போட்டியில் மதுரையை சேர்ந்த பி. கண்ணன் முதலிடத்தையும், பாலக்காட்டை சேர்ந்த மனுபிரசாத் இரண்டாவது இடத்தையும், சென்னையை சேர்ந்த கே. சிவாஜி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் பொது விற்பனை வரி உதவி ஆணையர் வி. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் இரண்டு இடங்களை பிடித்த கூடைப்பந்து அணிகளுக்கும், மூன்று இடங்களை பிடித்த செஸ் வீரர்களுக்கும் அணிகளுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் பதக்கங்கள திருச்சி கோட்டத்தை சேர்ந்த முத்த பிரிவு பாதுகாப்பு ஆணையர் எஸ். ராமகிருஷ்ணன், ஐ.ஆர்.பி.எப்.எஸ், திருச்சி உதவி பாதுகாப்பு ஆணையர் ஆர். சின்னதுரை ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.