Skip to content
Home » பாலமேடு ஜல்லிக்கட்டு… 23 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன் முதல் பரிசு..

பாலமேடு ஜல்லிக்கட்டு… 23 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன் முதல் பரிசு..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.  முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து 7 சுவாமி காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை.  காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 860 காளைகள் பங்கேற்றன. இதில் 23 காளைகளை பிடித்த சின்னபட்டி தமிழரசன் முதல் பரிசை வென்றார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 காளைகளை பிடித்த பாலமேடு மணி என்பவர் இரண்டாவது பரிசை வென்றார். 15 காளைகளை பிடித்த பாலமேடு ராஜா மூன்றாவது இடம் பிடித்தார். நெல்லை பொன்னர் சுவாமி கோவில் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு உரிமையாளருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!