Skip to content
Home » திருச்சி அருகே பஞ்சர் கடைக்காரர் மாயம்….

திருச்சி அருகே பஞ்சர் கடைக்காரர் மாயம்….

திருச்சி மாவட்டம் துவாக்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர ரெஜினா பானு (33). இவரது கணவர் பஷீர் முகமது (36). இவர் சைக்கிள் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். மேலும் இவர் குடிப்பழக்கம் உடையவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதியன்று குடிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம் தேடியும் ஆள் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மனைவி ரெஜினா துவாக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!