Skip to content
Home » பாபநாசம் அருகே புதிய ஊ.ஒ.தொ.பள்ளியை ராஜ்ய சபா எம்பி ஆய்வு…

பாபநாசம் அருகே புதிய ஊ.ஒ.தொ.பள்ளியை ராஜ்ய சபா எம்பி ஆய்வு…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே இடையிருப்பு ஊராட்சி, மணப் படுகையில் ராஜ்ய சபா எம்.பி சண்முகம் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி கட்டடத்தை ராஜ்ய சபா எம்.பி சண்முகம் எம்.பி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுதலைவர் கலைச் செல்வன், திமுக அம்மாபேட்டை வடக்கு ஒன்றியச் செயலர் சுரேஷ், மாவட்ட துணைச் செயலர் அய்யாராசு, பிடிஓக்கள் கூத்தரசன், அமானுல்லா உட்பட உடனிருந்தனர். இதேப் போன்று மெலட்டூர் அடுத்த நரியனூரில் கட்டி முடிக்கப் பட்ட ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி கட்டடத்தையும் பார்வையிட்டு ஆய்வுச் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!