Skip to content
Home » திருச்சியில் பெற்றோர்-ஆசிரியர் கழக மாநாடு…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்

திருச்சியில் பெற்றோர்-ஆசிரியர் கழக மாநாடு…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று (07.02.2024) பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பெற்றோரை கொண்டாடுவோம் எனும் தலைப்பில்  திருச்சி மண்டல மாநாடு நடந்தது.  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை திறந்து வைத்த அமைச்சர் சிறப்புரையாற்றினார் முன்னதாக அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ள சீர்வரிசை தட்டுகளை ஆசிரியர்களுடன் சேர்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் சீர்வரிசை தட்டுகளை எடுத்து வந்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் .மா.பிரதீப் குமார், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் முனைவர் க.அறிவொளி , தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி , ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி,  தொடக்கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் ,  சு.நாகராஜமுருகன், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் வி.முத்துக்குமார் மற்றும் பள்ளிக்கல்வித்துறை உயர் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்  இதில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!