தமிழறிஞரும் பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் நேற்று (செப்.11) காலமானார். அவரது உடல் மதுரையில் ஆஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி, நேரில் சென்று அவரது பாதங்களை தொட்டு வணங்கி “ஐயா லியோனி வந்திருக்கேன்யா… நான் வளர்த்த பிள்ளைனு சொல்லுவீங்களே…” என கதறி அழுதார். தமிழ் உலகிற்கும் பட்டிமன்ற மேடைகளுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக அமைந்த இவரது மறைவுக்கு அவர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
