புதுடெல்லியில் நடைபெற்ற உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலின் 25-வது ஆண்டு விழாவில், நாட்டின் துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தனிப்பட்ட ஒரு நாட்டின் லாபத்தை பார்க்கிலும் உலகளவில் மனித இனத்திற்கான அமைதியே மிகவும் முக்கியமானது என்றும், அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலகளாவிய குரலாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றும் கூறினார். மேலும், உலகளாவிய மோதல்களுக்கு மத்தியில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் வெற்றி மிக முக்கியமானது என்றும் தெரிவித்தார்.
