Skip to content
Home » பெரம்பலூரில் 349 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

பெரம்பலூரில் 349 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்தூர் (வடக்கு), நல்லூர் கிராமத்தில், இன்று (14.02.2024) நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 349 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் க.கற்பகம் வழங்கினார்.

இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, சார் ஆட்சியர் சு.கோகுல் இ.ஆ.ப., மகளிர் திட்ட இயக்குநர் அருணாச்சலம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வீரமலை, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் சுரேஷ் கிறிஸ்டோபர், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மு.கார்த்திக்கேயன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சரண்யா, குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள், பெருமத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!