Skip to content
Home » பெரம்பலூரில் பட்டபகலில் BSNL ஓய்வு ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை-பணம் கொள்ளை..

பெரம்பலூரில் பட்டபகலில் BSNL ஓய்வு ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை-பணம் கொள்ளை..

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் செல்வராஜ், இவர் பெரம்பலூர் BSNL நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில், பெரம்பலூர் சூப்பர் நகர் தெற்கு தெருவில் 12 ஆண்டுகளாக சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகன் தினேஷ் திருமணமாகி சென்னையிலும், மகள் பிரியதர்ஷினியை பென்னாடத்திலும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு செல்வராஜ் ம் அவரது மனைவி தனலெட்சுமியும் தனிமையில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் செல்வராஜ் தனது மனைவியுடன் இன்று காலை அம்மாபாளையம் சென்று விட்டு மாலை 4 மணிக்கு வீட்டை வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கேட் மட்டும் மூடியிருந்த நிலையில் உள்பக்க கதவு திறந்த வாறு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த செல்வராஜ் உள்ளே சென்று பார்த்த போது வீட்டினுள் இருந்த பீரோ இரண்டும் திறந்த வாறு இருந்துள்ளது. பின்னர் பீரோவிலிருந்த 15 சவரன் நகைகள் மற்றும் 50,000 பணம் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் அவரது இல்லத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் மோப்ப நாய் பிரிவு மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பெரம்பலூரில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!