பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளை விட 2023-ம் ஆண்டில் சாலை விபத்துகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. ஷ்யாம்ளா தேவி சாலை விபத்துகளை தவிர்க்க பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும் சாலை விதிகளை பின்பற்றி சாலையில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடையே நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சாலை விதிகளை பின்பற்றுமாறு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணிகள் நடத்தியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறையினர், நகர போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் சட்டம் ஓழுங்கு பாதுகாப்பு காவல்துறையினர் ஆகியோர்கள் தினசரி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியன் பயனாக பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2022 -ஆம் ஆண்டின் சாலை விபத்தின் இறப்பு விகிதத்தைவிட 2023 -ம் ஆண்டில் 19 சதவிகிதம் குறைவான இறப்பு விகித்தை குறைத்துள்ளதால் 2023- ம் ஆண்டில் சாலை விபத்தை குறைத்ததில் தமிழகத்தில் முதல் மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் தேர்வாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இது தொடர்பாக பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி அடுத்து வருங்காலங்களில் சாலை விபத்தை மேலும் குறைக்க மாவட்ட காவல்துறையினர் விபத்தில்லா மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தை மாற்றும் நோக்கத்தோடு பணியாற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.