Skip to content
Home » பெரம்பலூர் அருகே மனைவியை தாக்கிய கணவன் கைது…

பெரம்பலூர் அருகே மனைவியை தாக்கிய கணவன் கைது…

பெரம்பலூர் அருகேயுள்ள புது நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதுதுரை (36). இவரது மனைவி மலர்கொடி (27). கட்டடத் தொழிலாளியான இவர், தனது மனைவி மலர்கொடி மீது சந்சேகமடைந்து அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மருதுதுரை, மலர்கொடியை தாக்கி, பெட்ரோல் ஊற்றி கொலை செய்துவிடுவதாகக் கூறியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மலர்கொடி அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து மருதுதுரையை கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!