Skip to content
Home » பெரம்லூரில் பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி…

பெரம்லூரில் பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பணியின் போது உயிரிழந்த காவல் துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் நீர்தார் நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பணியின் போது உயிரிழந்த காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் உள்ளிட்ட வருவாய் துறை, காவல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப் பட்டுள்ள நீத்தார் நினைவு நாள் தூணிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 23 குண்டுகள் முழங்க போலீசார் அணிவகுப்பு மரியாதை உடன் துக்கம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆயுதப்படை வளாக காவல்துறையினர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!