Skip to content
Home » சோளம் அறுவடை மிஷனில் சிக்கி பெண் உயிரிழப்பு…. பெரம்பலூரில் பரிதாபம்…

சோளம் அறுவடை மிஷனில் சிக்கி பெண் உயிரிழப்பு…. பெரம்பலூரில் பரிதாபம்…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பொன்னகரம் கிராமத்தை சேர்ந்த குமார் .மனைவி ஜெயக்கொடி (33) குமார் வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார் .இவர்களுக்கு மேனிஷா என்ற ஒரு மகள் உள்ளார்.  ஜெயக்கொடி தனக்கு சொந்தமான வயலில் முத்து சோளம் பயிரிட்டுள்ளார். அவற்றை அருவடை செய்ய இயந்திரம் மாலை அவரது வயலுக்கு வந்தது அப்போது இயந்திரத்தை அதன் உரிமையாளரான நூத்தபூர் பாளையம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் ஓட்டியுள்ளார் . வயலில் முத்து சோளத்தை அருவடை செய்து கொண்டிருக்கும் போது ஜெயக்கொடி இயந்திரத்தின் பின் பகுதியில் சிந்தும் சோளகதிர்களை எடுத்து கொண்டிருந்துள்ளார் .

அப்போது அறுவடை மிஷின் பின்பக்கமாக வரும் போது அதன் பின் சக்கரம் ஜெயக்கொடி மீது ஏறியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு முருக்கன்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றன.ர் ஆனால் செல்லும் வழியிலே பரிதாபமாக இறந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கோவிந்தராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!