தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தற்போதைய அரசை மின்சாரப் பற்றாக்குறை விவகாரத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை பெரம்பூர் தொகுதி மின்வெட்டில் முதலிடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்தவர்களே இந்த ஆட்சி குறித்து அதிருப்தியில் பேசி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிப் பெரம்பூர் தொகுதியை மின்வெட்டில் நம்பர் 1 ஆக மாற்றியுள்ளார் முதலமைச்சர் விஜய். அண்ணன் கையில் பவர் வந்தால் தமிழ்நாடு மாறும் என நினைத்தோம்.. ஆனால் தமிழ்நாட்டுக்கே பவர் போயிடுச்சுன்னு தவெகவினர் பேசுகின்றனர்” -உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
