Skip to content
Home » பெரம்பலூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

பெரம்பலூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட முருக்கன் குடி கிராமத்தில்  திருட்டுத்தனமான மது விற்கப்படுவதாக  பொதுமக்கள் போலீசில் புகார் செய்தனர்.

அதிகாரிகளிடமும் மனு கொடுத்தனர். இதில் நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் ,பள்ளி மாணவர்கள்  இன்று காலை திடீர் சாலை மறியல் ஈடுபட்டு அரசு  பஸ்சை  சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தி நடத்தினர். இது குறித்து  நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர் . இதனால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு  கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!