Skip to content
Home » தமிழகம், புதுவையில்…… பிளஸ்1 தேர்வு தொடங்கியது

தமிழகம், புதுவையில்…… பிளஸ்1 தேர்வு தொடங்கியது

பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று  காலை  தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்கள், 4 லட்சத்து 30 ஆயிரத்து 471 மாணவிகள் என மொத்தம்8 லட்சத்து 20 ஆயிரத்து 207 பேர் எழுத உள்ளனர்.

இதுதவிர தனித்தேர்வர்களாக 5 ஆயிரம் பேரும், சிறைவாசிகள் 187 பேரும் தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள். தேர்வில் முறைகேடுகளை தடுக்க 3 ஆயிரத்து 200 பறக்கும் படை அதிகாரிகளும், தேர்வு பணிகளில் 46 ஆயிரத்து700தேர்வறை கண்காணிப்பாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறந்த முறையில் அமைக்கப்பட்முள்ளன.

முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடக்க இருக்கிறது. இன்று தொடங்கும்தேர்வு வருகிற 25-ந் தேதி வரை நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!