சண்டிகர்: பொதுமக்கள் தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கும் பிரதமர் நரேந்திர மோடி தான் முதலில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை குறைக்க வேண்டும் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியபோது, “மக்களை வீட்டிலிருந்தே பணியாற்றுங்கள் என்று கூறும் பிரதமரால், ஏன் வீட்டிலிருந்து பணியாற்ற முடியவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “உலகின் எங்கோ நடைபெறும் போரின் காரணமாக நம் நாட்டில்தான் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
பகவந்த் மானின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
