Skip to content
Home » பிரதமர் மோடி 20ம் தேதி ……..ஶ்ரீரங்கம் வருகை …….நிகழ்ச்சி விவரம்…….

பிரதமர் மோடி 20ம் தேதி ……..ஶ்ரீரங்கம் வருகை …….நிகழ்ச்சி விவரம்…….

  • by Senthil

பிரதமர் மோடி வரும் 20ம் தேதி(சனிக்கிழமை) திருச்சி வருகிறார். அவரது நிகழ்ச்சி விவரம்  தெரியவந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

19ம் தேதி  பிற்பகல் டில்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர் மோடி, அங்கு கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்,  விளையாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும்   அன்று இரவு  ெசன்னையில் பிரதமர் தங்குகிறார். மறுநாள் காலை  சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு முடிந்ததும் அவர் காரில் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு செல்லுகிறார். கோயிலில்  பிரதமருக்கு  பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து காலை 11 மணி முதல்   நண்பகல்  12. 40 மணி வரை  பிரதமர் மோடி  அனைத்து சந்நிதிகளிலும்  வழிபாடு செய்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு  விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து அவர்  ராமேஸ்வரம் புறப்பட்டு செல்கிறார். அங்கு  சாமி தரிசனம் செய்யும் பிரதமர்,  அயோத்தி ராமர் கோயில் கும்பாபிசேகத்திற்கு ராமேஸ்வரத்தில் இருந்து   புனித நீர் எடுத்துக்கொண்டு   செல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!