பிப்.24 வரை காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட மாட்டாது என தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது. வினாத்தாள் குளறுபடி காரணமாக தேர்வை ரத்துசெய்து புதிதாக தேர்வு நடத்த குருசாமி, ஆனந்தராஜா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க உத்தரவிட்டு ஐகோர்ட் கிளை வழக்கை ஒத்திவைத்தது.

