சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி, போலீஸ் விசாரணையில் அடித்து கொலை செய்யப்பட்டாார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 6 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 2 ஏட்டுகள், 3 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைதான ஏட்டுகள் கண்ணன், பிரபு, போலீஸ்காரர்கள் ராஜா, சங்கரமணிகண்டன், ஆனந்த் ஆகிய 5 பேரின் குடும்பத்தினர் இன்று திருப்புவனம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கைது செய்யப்பட்ட போலீசாரின் மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.