நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், உதவி போலீஸ் சூப்பிரெண்டாக இருந்தவர் பல்வீர்சிங். இவர் விசாரணைக்கு வரும் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.கள், போலீசார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பல்வீர்சிங்கால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகரைத்தொடர்ந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே பல்வேீர்சிங் மீது இன்று போலீசார் குற்றவழக்குப்பதிவு செய்தனர்.