Skip to content

பொள்ளாச்சி… சந்தையில் மாடுகள் 3 கோடி- ஆடு-கோழி 1 கோடிக்கும் விற்பனை

தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளது. வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் என 2 நாட்கள் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை களில் மாடுகள் விற்பனையும், வியாழக்கிழமை, ஆடு, மாடு விற்பனையும் சேர்ந்து நடைபெறுகிறது.

சந்தைக்கு பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வரும். மேலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில்

இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வருகின்றன. கடந்த சில மாதங்களாக சந்தை நாட்களில் இரண்டு கோடி ருபாய் அளவிற்கே வர்த்தகம் நடைபெற்று வந்தது. தற்போது வருகிற தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பொள்ளாச்சி மாட்டு சந்தை களை கட்டி இருந்தது.

வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாடு மற்றும் எருமைகள் கொண்டு வரப்பட்டிருந்தது. அதனை வாங்குவதற்காக கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் வந்திருந்தனர். இதனால் காலை முதலே சந்தை களை கட்டி உள்ளது. இதனால் கேரள வியாபாரிகள் அதிகளவில் மாடு மற்றும் எருமைகளை வாங்கினர். கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் மூன்று கோடிம் ஆடு கோழி வர்த்தகம் நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!