கோவை பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமனின் மகன் பிரவீன் வரவேற்பு விழா நடைபெற்றது.மிக பிரம்மாண்டமான வகையில் நடைபெற்ற இந்த வரவேற்பு விழாவில், அதிமுகவின் முக்கிய பிரமுகர்களும், பாஜகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மகாராஷ்டிரா கவர்னர் சி வி ராதாகிருஷ்ணன் ,எஸ் பி வேலுமணி, விஜயபாஸ்கர், தமிழக பாஜக தலைவர் நயினார்
நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இரட்டை இலை சின்னம் பொரித்த ஆள் உயர வெள்ளி செங்கோல் , பொள்ளாச்சி ஜெயராமன் குடும்பத்தினர் கொடுத்து பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது, இந்த திருமண வரவேற்பு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட 10000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
