Skip to content
Home » பொள்ளாச்சி அருகே……..விஏஓ தற்கொலை

பொள்ளாச்சி அருகே……..விஏஓ தற்கொலை

கோவை, பொள்ளாச்சி அடுத்துள்ள கூளநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வரும் கருப்புசாமி என்பவர் உடுமலை அடுத்துள்ள பெரியகோட்டை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.

நேற்று இரவு அவருடைய சொந்த ஊரான கூளநாயக்கன்பட்டியில் உள்ள வீட்டில் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் சல்பாஸ் மாத்திரையை  சாப்பிட்டு உள்ளார்.  உடனடியாக  அவரை குடும்பத்தினர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.   அங்கு சிகிச்சை பலனின்றி  கருப்புசாமி உயிரிழந்தார். தற்போது அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!