Skip to content
Home » பெரம்பலூர் போலீசார் நடத்திய பொங்கல் விழா…..செய்தியாளர்கள் பரிசு வழங்கினர்

பெரம்பலூர் போலீசார் நடத்திய பொங்கல் விழா…..செய்தியாளர்கள் பரிசு வழங்கினர்

  • by Senthil

பொங்கல் திருநாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில்  மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கபடி, வாலிபால், ஓட்ட பந்தயங்கள், கோலப்போட்டி, பொங்கல் போட்டி, உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இன்று நடைபெற்றது.இப்போட்டிகள் அனைத்தையும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷியாம்ளா தேவி  கொடியசைத்து தொடக்கி வைத்ததுடன் அவர்களுடன் இணைந்து பொங்கல் விழாவை கொண்டாடினார். விழாவை வியக்க வைக்கும் வண்ணமாக போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அழைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்க வைத்து கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட அனைத்துறை காவல்துறையினர், ஆயுதப்படை பிரிவு காவல்துறையினர், போக்குவரத்து காவல்துறையைச் சேர்ந்த ஆண் பெண் இருபாலர்களும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!