Skip to content
Home » பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு … பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது தமிழக அரசு…

பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு … பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது தமிழக அரசு…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு, ஆண்டுதோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு  பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் 2.19 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுகரும்பும் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.238.92 கோடி செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த அறிவுப்பு வெளியாகி உள்ளது. இதோடு ரூ.1,000 ரொக்கமும் வழங்கப்படும் எனவும் இதற்கான அறிவிப்பு சிலநாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!