Skip to content
Home » திருச்சியில் மாநில அளவிலான பூப்பந்தாட்டம் போட்டிதொடங்கியது…….

திருச்சியில் மாநில அளவிலான பூப்பந்தாட்டம் போட்டிதொடங்கியது…….

திருச்சி கல்லுக்குதி இரயில்வே மைதானத்தில் 5.ம் ஆண்டு ஆர்.ஜெ ஜெ. எஸ் பூப்பந்தாட்டப்போட்டிகள் இன்று காலை 8.30 மணியளவில் துவங்கின. இந்த துவக்க விழாவில் தென்னக இரயில்வே உள் விளையாட்டுத்துறை செயலர் ஹரிக்குமார் விளையாட்டுப் போட்டிகளை துவக்கிவைத்தார். சீனிவாசன் மாநில  பூப்பந்தாட்டப் போட்டி துணைத்தலைவர் முன்னிலை வகித்தார் . துவக்க விழாவில் தேசிய வீரரும் இரயில்வே சேம்பியனுமான பிச்சை (எ) நித்தியானந்தம் திருச்சி மாவட்டக்கலைவர் தகுணா செயலர் சண்முகசுந்தரம், பொருளாளர் வேல்முருகன், துணைத் தலைவர் சீனிவாசன். சிவானந்தம், நடராஜன், சிவராஜ், திருச்சி இரயில்வே மைதான பொறுப்பாளர் மற்றும் போல் வால்ட் சாம்பியன் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியானது இன்றும் நாளையும் 2 நாட்கள் நடைபெறுகிறது போட்டிகளில் சென்னை, அம்பத்தூர்,

தாம்பரம் அசோக் நகர், பொன்னேரி. மதுரை, நெல்லை, கோவை, தருமபுரி, சேலம். ஆரணி, உடுமலைப்பேட்டை, ஒசூர், தஞ்சை, புதுக்கோட்டை தருவாரூர், நாகை, சிதம்பரம், திண்டுக்கல், திருப்பூர், கோவை போன்ற ஊர்களிருந்தும், திருச்சி பொன்மலை, அரியமங்கலம், மணப்பாறை, ஓ.எப்.டி மற்றும்ஆசிய அணிகள் அடங்கிய சுமார் 37 அணிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை ஆர்.ஜே ஜே.எஸ் அணியின் தலைவர். இலங்கேஸ்வரன், செயலர் மணிமாறன், பொருளாளர் சிவக்குமார், துணைத் தலைவர்கள் அங்கையர், பழனியப்பன். கேசவன், பாஸ்கர், இணைச்செயலாளர்கள் பிரசன்னா, வைரமுத்து பாலமுருகன் பிரகாஷ், மற்றும் உறுப்பினர்கள் நாச்சியப்பன், சேகர் பாலகிருஷ்ணன் கல்யாண சுந்கரம். பிாமன், போத்திராஜ், கார்த்திக், ராஜசேகரன், சந்தானம் ஆகியோர் செய்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!