Skip to content
Home » மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 10ம் வகுப்பு மாணவன் பலி….

மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 10ம் வகுப்பு மாணவன் பலி….

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட புதுப்பேடு பகுதியை சேர்ந்த ரூபேஷ் (14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை சிறுவன் விளையாடி கொண்டிருந்த போது அங்கிருந்த உயர்மின் விளக்கு கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து சிறுவன் சுருண்டு விழுந்துள்ளான். இதனையடுத்து உறவினர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு அம்புலன்ஸ் உதவியுடன் பொன்னேரி அரசு  ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த  டாக்டர்கள் சிறுவன் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் சடலம் பொன்னேரி அரசு மருத்துவமனை சிவ கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மின் கம்பத்தில் மின்சாரம் கசியும் வகையில் அஜாக்கிரதையாக பராமரித்து வந்த மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரூராட்சி நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் சிறுவன் உயிரிழந்ததாக புகார் தெரிவித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டம் காரணமாக பொன்னேரி – திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!