Skip to content
Home » அண்ணா பல்கலை…. செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு

அண்ணா பல்கலை…. செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு

தமிழ்நாட்டில்  மக்களவை தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடந்தது.  இதன் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆங்காங்கே சில கல்வி நிலையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. இப்படி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பல இடங்கள் பொறியியல் கல்லூரிகள் ஆகும்.  ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இன்று மாலை வரை அந்த இடத்தில் பலத்த பாதுகாப்பு இருக்கும்.

இந்த நிலையில் மே 15ம் தேதி பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு நடப்பதாக இருந்தது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு  தேர்வு நடத்துவது சிரமமாக இருக்கும் என்பதால் அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகளை  வரும் 15ம் தேதிக்கு பதில்  ஜூன் 6ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது .இந்த நிலையில் வரும் 15-ம் தேதி பொறியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் இல்லை என்றும் அது ஜூன் 6-ம் தேதி தொடங்கி நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 6ம் தேதி முதல் தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!