Skip to content
Home » போதைப்பொருள் புழக்கம்…. திருவெறும்பூரில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

போதைப்பொருள் புழக்கம்…. திருவெறும்பூரில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

திமுக பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை கண்டித்தும், தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிவதை கண்டித்தும், இதற்கு காரணமாக திமுக அரசை கண்டித்தும், போதை பொருள் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தியும், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் தெற்கு ஒன்றியம் மற்றும் திருவெறும்பூர்

பகுதி கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ் ராவணன், பகுதி அவைத்தலைவர் முருகானந்தம் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் போது திமுக அரசை கண்டித்தும், போதைப்பொருள் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தியும் அதிமுகவினர் கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் சுபத்ரா தேவி, பாஸ்கர், வட்ட செயலாளர் ரோஷன், யோகானந்தம், தொழிலதிபர் எஸ்.ஆர்.சபரி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!