Skip to content
Home » முசிறி கர்ப்பிணி தற்கொலை…. ஆர்டிஓ விசாரணை

முசிறி கர்ப்பிணி தற்கொலை…. ஆர்டிஓ விசாரணை

  • by Senthil
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த ஏவூரைச் சேர்ந்த  அசோக் மேத்தா. இவர் சேலம் தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.  அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 3 வருடத்திற்கு முன் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை  சேர்ந்த கென்னடி என்பவரது மகன்  பிரியா(25)  என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ள  நிலையில்   பிரியா மீண்டும் கர்ப்பமானார்.
 கடந்த வாரம்  அசோக்மேத்தா ஏவூரில் உள்ள தன் தாய் வீட்டிற்கு  குடும்பத்துடன் வந்தார். விடுமுறை முடிந்தவுடன் அசோக் மேத்தா தனது மனைவி குழந்தையையும் தன் தாய் வீட்டில் விட்டுவிட்டு,  சேலம் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் பிரியாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வலி தாங்காமல் மனம் உடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.   இது குறித்து பிரியாவின் தந்தை கென்னடி கொடுத்த புகாரின் பேரில்  முசிறி கோட்டாட்சியர் மற்றும்  முசிறி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் ஆகி 3 வருடமே ஆவதால் வரதட்சணை கொடுமை காரணமாக  பிரியா தற்கொலை செய்தாரா என்றும் போலீசார் விசாரிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!