தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து வாலிபர் சாவு
திருச்சி பீமநகர் நியூ ராஜா காலனியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவரது மகன் கார்த்தி (வயது 24) இவர் குடிபோதையில் வீடு திரும்பி உள்ளார். அப்போது அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தவறி விழுந்தார் இதைப் பார்த்து அவரது சகோதரர் முருகேசன் கார்த்தியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு டாக்டர் பரிசோதித்து பார்த்து விட்டு கார்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் கல்லூரி டிரைவர் திடீர் சாவு
திருச்சி உறையூர் சோளம் பாறை ராமலிங்க நகர் ஒன்றாவது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் (வயது 37) இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது.
மேலும் உடல் நல பிரச்சனைக்காக மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமான மாத்திரை சாப்பிட்ட கௌதம் மயங்கி விழுந்தார். இதையடுத்து மனைவி திலகவதி அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு கௌதம் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து திலகவதி கொடுத்த புகாரின் அடிப்படையில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
முன்விரோதம்.. வாலிபரை அரிவாளால் தாக்கிய 2 சிறுவர்கள் கைது
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் இவரது மகன் தீரன் (வயது 19) இவருக்கும் இரண்டு சிறுவர்களுக்கும் இடையே கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வாய் தகராறு ஏற்பட்டது இந்த நிலையில் ஸ்ரீரங்கம் பங்கஜம் காலனி வடக்கு தேவி தெரு பகுதியில் அந்த இரண்டு சிறுவர்களும் போற்ற சைக்கிள் வந்துள்ளனர் இதைப் பார்த்த தீரன் அவர்களிடம் எதற்காக என்னை கிண்டல் செய்து தகராறில் ஈடுபட்டீர்கள் என கேட்டுள்ளார். இதில் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவர்கள் அரிவாளால் தீரனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர் இதில் அவரது தலை ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தீரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தப்பு ஓடிய அந்த இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டு காப்பகத்தில் அடைக்கப்பட்டனர்.
கள்ளத்தொடர்பு… குடிக்க பணம் கேட்டு மனைவியை தாக்கிய வாலிபர்
ஸ்ரீரங்கம் மூலதொப்பு நைட்டு சாயல் டெப்போ ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37) இவரது மனைவி அகிலா (வயது33. )
இந்த தம்பதியருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மணிகண்ட ராஜாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது, மேலும் மதுவுக்கு அடிமையான மணிகண்ட ராஜா அவ்வப்போது மனைவி அகிலாவிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து வந்தார். நேற்று வழக்கம் போல் மது குடிக்க பணம் கேட்டார். இதில் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த மணிகண்ட ராஜா மரக்கட்டையால் மனைவியின் தலையில் அடித்தார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது இதையடுத்து உறவினர்கள் அதை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இது குறித்து அகிலா கொடுத்த புகாரின் அடிப்படையில் கணவர் மணிகண்ட ராஜா மீது ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்டோவை நிறுத்திவிட்டு டிரைவர் மாயம்
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர்
இலங்கேஸ்வரன் இவரது மகன் பார்த்திபன் (வயது 32) திருமணமாகாத இவர் ஆட்டோ ஓட்டி வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பார்த்திபன் திடீரென மாயமானார். இது தொடர்பாக உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் அவரது சகோதரி வசந்தா லட்சுமி கண்டோன்மென்ட் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது கடந்த 5ந் தேதி பார்த்திபன் தனது ஆட்டோவை திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு மாயமானது தெரிய வந்தது இதைத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
வாலிபரிடம் செல்போன் பறித்த கொள்ளையன் கைது
திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் ஆலம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 22) இவர் சத்திரம் பஸ்லையும் பகுதியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மர்ம நபர் முகமது ரபீக் தனது கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார். உடனே அவர் விடாமல் துரத்திச் சென்று அந்த நபரை பிடித்து கோட்டை போலீசில் ஒப்படைத்தார். இது தொடர்பாக போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். கைதானவர் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சித்தலவாய் முதலியார் தெரு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 21 )என்பது தெரிய வந்தது.