சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டடம் நிறைவடந்துள்ளது. இதற்கான திறப்பு விழா வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்காக அவர் வரும் 27ம் தேதி சென்னை வருகிறார். இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார். இந்த தகவலை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.