திருச்சியில் தனியார் பேருந்து ஊழியர்கள் மீது தொடர்ந்து நடக்கும் தாக்குதல்களை கண்டித்து, மாநகரில் இயங்கும் 230 தனியார் பேருந்துகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து எந்த பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதை அடுத்து காவல்துறையினர் சத்திரம் பேருந்து நிலையத்தில் ஓட்டுநர்களுடன் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
