ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட கோயில்களுக்கு அறங்காவலர்களை தேர்வு செய்வதற்காக தமிழக அரசு குழு அமைத்துள்ளது. பொம்மபுரம் ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஆன்மிகப் பேச்சாளர் சுமதிஸ்ரீ, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சம்பத், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ராமநாதன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
