Skip to content
Home » பொதுக்கூட்டம் கூட்டி, மன்னிப்பு கேட்க வேண்டும்…. அதிமுக மாஜி எம்.எல்.ஏவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

பொதுக்கூட்டம் கூட்டி, மன்னிப்பு கேட்க வேண்டும்…. அதிமுக மாஜி எம்.எல்.ஏவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Senthil

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக  செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான குமரகுரு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாக பேசினாராம். இது குறித்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்து விடுவார்கள்.  எனவே  முன்ஜாமீன் வழங்க வேண்டும் என குமரகுரு சென்னை ஐகோர்ட்டில்   மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாாித்த நீதிபதி,  குமரகுருவுக்கு நூதனமான ஒரு நிபந்தனையை விதித்தார்.

அதன்படி குமரகுரு ஒரு பொதுக்கூட்டத்தை கூட்டி , அந்த பொதுக்கூட்டத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதன்பிறகு முன் ஜாமீன் குறித்து மனு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

நீதிபதியின் இந்த நூதன உத்தரவால் குமரகுரு  அதிர்ச்சியடைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!