Skip to content
Home » புதுவையில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் டெபாசிட்……பட்ஜெட்டில் அறிவிப்பு

புதுவையில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் டெபாசிட்……பட்ஜெட்டில் அறிவிப்பு

  • by Senthil
புதுச்சேரியில் கடந்த வருடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை இருந்தது.ஆனால் கடந்த வருடம் புதுச்சேரியில் முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் கடந்த வருடம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியும் கூட தாக்கல் செய்யப்பட வேண்டிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.கடந்த வருடம் வெறும் துணை நிலை ஆளுநர் தமிழிசையின் உரை மட்டுமே அங்கு நடந்தது.
கடந்த வருடம் பட்ஜெட் சுமார் 11 ஆயிரம் கோடிக்கு இருக்கும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பட்ஜெட்டிற்கு சாதகமான சூழ்நிலை நிலவி வந்தது. ஆனாலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த பட்ஜெட்டிற்கு எப்படியாவது அனுமதி வாங்க வேண்டும், மத்திய அரசிடம் கூடுதல் நிதி பெற வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி கூட நேரடியாக டில்லிக்கு சென்று இருந்தார்.
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலை சந்திக்க வேண்டியது இருப்பதால் இந்த முறை முழு பட்ஜெட் மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறுசலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை

இன்று காலை மீண்டும் சட்டசபை கூடியது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி சரியாக 10.15 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். பட்ஜெட்டில் கூறப்பட்ட சிறப்பு அம்சங்கள் வருமாறு:- இந்த ஆண்டில் அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படும். 70 வயது முதல் 79 வயது வரை உள்ள மீனவ பெண்களுக்கு உதவித்தொகை ரூ.3 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படும். மகளிர் மேம்பாட்டுக்கு ரூ. ஆயிரத்து 330 கோடி ஒதுக்கப்படும்.

புதுவையில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படும். புதுவையில் வான்கோழிகள் வளர்க்க ஊக்குவிக்க 50 சதவீதம் மானியம், ஆட்டு பண்ணை வைக்க 50 சதவீதம் மானியம், ஆதி திராவிடர்களுக்கு ரூ.9 லட்சம் வரை 100 சதவீதம் மானியம், பிற வகுப்பினருக்கு ரூ.5 லட்சம் வரை 50சதவீதம் மானியம் வழங்கப்படும். காரைக்கால் அக்கரை வட்டத்தில் நவீன சிறைச்சாலை, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டுவரப்படும். எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடி ஒதுக்கீடு, புதுவையில் உள்ள கோவில்களில் ஆவணங்கள், சொத்துக்கள் மற்றும் நகைகள் ஆகியவற்றை மின்னனு மையமாக்கப்படும். அதனை பொதுமக்கள் பார்வையிடும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்படும். புதுவையில் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.300 கியாஸ் சிலிண்டர் மானியம் வழங்கப்படும். புதுவையில் பிறக்கும் பெண்  குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை தேசிய வங்கியில் செலுத்தப்படும்.

தொற்று நோயை கண்டறிய ஆய்வகம் அமைக்கப்படும். 50 புதிய மின்சார பஸ்கள் இயக்கப்படும். மணப்பட்டு கிராமத்தில் 100 ஏக்கரில் சுற்றுலா நகரம் ஏற்படுத்தப்படும். அட்டவணை இனத்து பெண்கள் பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம். இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!