Skip to content
Home » புதுக்கோட்டை விவசாயி… மகளுடன் தற்கொலை….. அதிர்ச்சி தகவல்

புதுக்கோட்டை விவசாயி… மகளுடன் தற்கொலை….. அதிர்ச்சி தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள  கட்டக்குடியை சேர்ந்தவர் பால்ராஜ்(36), இவரது மகள்  நிதர்சனா(5).  பால்ராஜூக்கும், அவரது மனைவிக்கும்  அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.   மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு  மனைவியை அடித்து உள்ளார். இந்த நிலையில் பால்ராஜ் மனைவி  சில தினங்களுக்கு முன் வீட்டை விட்டு சென்று விட்டார்.  அவர் வேறு ஒரு நபருடன் ஓடிவிட்டதாக ஊர் முழுவதும் பேசப்பட்டது.

இதனால் அவமானம் அடைந்த பால்ராஜ், வெளியில் நடமாடவில்லை. இந்த நிலையில் நேற்று  மாலை  இருட்டிய பிறகு மகள் நிதர்சனாவை அழைத்துக்கொண்டு வெளியே போனார். பின்னர் வீடு திரும்பவில்லை. இன்று காலை  பால்ராஜூம், நிதர்சனாவும் அருகே  உள்ள குளத்தில் பிணமாக மிதந்தனர். எனவே  மகளை குளத்தில் வீசிவிட்டு பால்ராஜூம் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்த இலுப்பூர் போலீசார். சடலங்களை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பால்ராஜின் மனைவியையும் தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!