Skip to content
Home » புதுகையில் பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி…

புதுகையில் பகுதிநேர ரேசன் கடையை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், அரசமலை ஊராட்சி, மதியாணி பகுதிநேர நியாயவிலைக் கடையினை,   சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (29.05.2023) திறந்து வைத்தார். உடன் மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா,  கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்  கோ.இராஜேந்திர பிரசாத், பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணம் மீன்பிடி இறங்கு தளத்தினை, மாண்புமிகு மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்  அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள்,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்  ஆகியோர் இன்று (29.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்  மா.செல்வி, மணமேல்குடி ஒன்றியக்குழுத் தலைவர்  பரணி கார்த்திகேயன், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர்  மகேஸ்வரி சண்முகநாதன், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் (பொ) திரு.சிவக்குமார், துணை இயக்குநர் (மீன்வளம்) திருமதி ரெ.சர்மிளா, உதவி இயக்குநர் (மீன்வளம்) திரு.சின்னகுப்பள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!