Skip to content
Home » புதுகையில் திருட்டு போன நகை மீட்பு… வாலிபர் கைது…

புதுகையில் திருட்டு போன நகை மீட்பு… வாலிபர் கைது…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வந்திதா பாண்டே  உத்தரவின் பேரில் பொன்னமராவதி உட்கோட்ட தனிப்படையினர் காவல் உதவி ஆய்வாளர்  அன்பழகன்  தலைமையில் நமணசமுத்திரம் செட்டியார் தெருவில் உள்ள ராஜேந்திரன் என்பவர் வீட்டில் கடந்த 17.09.23-ம் தேதி நகை திருட்டு போனது. இந்த வழக்கு மற்றும் கடந்த 29.06.23-ம் தேதி கீழாநெல்லிகோட்டை அரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் நகை காணாமல் போன வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை  வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் குற்றவாளியான புதுக்கோட்டை கார்த்திக் (29)   என்பவரை அதிரடியாக கைது செய்தனர். இதனை தொடர்ந்து  அவரிடமிருந்து 41 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டது. மேலும் குற்றவாளியான கார்த்திக்கை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தபட்டார்.   குற்றவாளியை விரைவாக பிடிக்க உதவியாக இருந்த தனிப்படையினரை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வந்திதா பாண்டே நேரடியாக அழைத்து வெகுவாக பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!