புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தமலை கோயிலில் தேர்த்திருவிழாவில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று கலந்து கொண்டார். உடன் திருச்சி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.